ஹைக்கூ - பகுதி 1

 

💗.நிரந்தரமற்ற இவ்வாழ்வியல் சூழலில் ,

நிபந்தனையற்ற உறவுகள் கிடைத்திடல் பாக்கியமே..!


💗.கருணை உள்ளத்தினையும்,

 கருங்கல்லாய் மாற்றும்  ஆற்றல் படைத்தது காலம்..!


💗.நிதர்சனம் அறிந்தும் கூட ,போலி முகமூடி அணிந்து வாழ்க்கை எனும்

 நாடகமேடையை அலங்கரிக்கும் கோமாளிகள் நாம்..!


💗.கோட்டையை காத்த கம்பீரமான மதில் சுவர்கள் கூட , 

காலம் கடந்துவிட்டால் குட்டிசுவராகிவிடும்..!


💗.நிலையற்ற வாழ்வியல் தனில்,தனிமை மீது கொள்ளும் காதல்,

நடுக்கடலில் கவிழ்ந்த படகின் முதுகில் அமர்ந்த பயணம் போலாகும்,

கரையை அடையாவிட்டாலும் கூட,உயிருக்கு உத்தரவாதம் உண்டு , 

நமக்கான வழிகாட்டல்  வரும்வரை..! 


💗.அதீத கோபம் முட்டாளாக்கும்,அளவுகடந்த பொறுமை ஏமாளியாக்கும்,

 எதுவாயினும் வரையறைக்குள் இருத்தல் அவசியம்..!



                                                                                                              - ந.மகேந்திரன் 

Post a Comment

0 Comments